கர்நாடக மாநிலத்தில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் சந்தேகல்லூர் கிராமத்தில் இருக்கிறது ஞானமாதேஸ்வர கிரமீனா சமஸ்தேக்கு சொந்தமான தொடக்கப்பள்ளி. அந்த பள்ளியில் 2 ஆம் படிக்கும் மாணவன் ஆடையில் மலம் கழித்தால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அந்த 7 வயது சிறுவன் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றியுள்ளார். இதனால் அந்த சிறுவனின் உடம்பில் 40% சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை வெளியில் சொல்ல கூடாது என்று அந்த ஊர் பெரிய தலைக்காடுகள் அந்த சிறுவனின் பெற்றோர்களை மிரட்டியுள்ளார்கள். இதனால் பயத்தில் புகார் அளிக்க அவர்கள் முன்வரவில்லை. பிறகு அந்த பகுதி லோக்கல் மீடியாக்களை அதனை விசாரித்து பார்க்கையில் இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆனதாகவும், இது குறித்து வெளியே சொல்ல கூடாது என்று மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…