இந்திய மாணவர்கள், சர்வதேச அளவில் உள்ள பல்வேறு நாடுகளில் தங்களுக்குப் பிடித்த பட்டத்தை பயின்று வருகின்றனர். இவ்வாறு, மாணவர்கள் மேலை நாடுகளுக்கு சென்று கல்வி பயில்வதற்கு கல்வி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருக்கும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் உள்ள மாநிலங்களில் வாழும் அல்லது அங்கிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது இந்திய மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்திய மாணவர்களின் கல்வியின் எதிர்காலம் ஆஸ்திரேலியாவில் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், உத்திரபிரதேசம், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வசித்து வரக்கூடிய மாணவர்களின் கல்வி விசாவை நிறுத்துவதற்கு அறிவுறுத்தி இருக்கிறது. மேலும், இம்மாநிலத்தில் இருந்து மாணவர்கள் கல்வி விசாவை முறைகேடாக பெறுவது, போலி ஆவணங்களை சமர்ப்பிப்பது, விசா முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், இந்த பல்கலைக்கழகங்கள் கல்வி விஷா வழங்குவதை நிறுத்தி வைத்து தடை செய்துள்ளது. இது தற்காலிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…