மகாராஷ்டிராவில் தானேவை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி சாலையில் நடந்து சென்ற போது ஆட்டோ ஓட்டுநர் தகாத முறையில் நடந்துகொண்டார். பயந்து போன மாணவி கத்தி கூச்சல் போட்டதும், ஆட்டோ ஓட்டுநர் அவரின் கையை உதறிவிட்டு தப்பிக்க முயன்றார். ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநரை வெளியே இழுக்க முயன்ற மாணவியை, ஆட்டோ உடன் சேர்த்து தர தரவென சுமார் 500 மீட்டர் இழுத்து செல்லப்பட்டார். பிறகு தவறி கீழே விழுந்த மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…