கடந்த ஆகஸ்ட் 20 தேதி உத்திரப்பிரதேச மாநிலம் ஷாம்லியில் உள்ள பதி பரத்புரி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு வீட்டிலேயே பிரசவம் நடந்துள்ளது. அப்போது, மூன்று கால் மற்றும் இரண்டு கைகளை கொண்ட குழந்தை பிறந்துள்ளது. இதை கண்டு அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து, உடனே அருகில் உள்ள மருத்துவமனைவுக்கு குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மற்ற 2 கால்களைப் போலவே, குழந்தையின் மூன்றாவது கால் முழுமையாக சுறுசுறுப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். மருத்துவரீதியாக இம்மாதிரியான ஆச்சர்யங்களும் அதியங்களும் எங்கோ ஒரு பகுதியில் இன்னமும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
பொதுவாக, மனிதர்களுக்கு இரண்டு கைகளும் இரண்டு கால்களும் தான் இருக்கும். தற்போது மூன்று கால்களுடன் பிறந்த இந்த குழந்தையின் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த குழந்தையை காண மக்கள் வெகு தொலைவில் இருந்து குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…