Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பகீர்.. எட்டு மாத கர்ப்பிணியை தாக்கிய திரிணாமுல் கட்சியினர்!!

Sekar August 22, 2022 & 17:01 [IST]
பகீர்.. எட்டு மாத கர்ப்பிணியை தாக்கிய திரிணாமுல் கட்சியினர்!!Representative Image.

கொல்கத்தாவில் எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணைத் தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரைக் கைது செய்யக் கோரி நர்கெல்டங்கா காவல் நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சி போராட்டம் நடத்தியது. எனினும் திரிணாமுல் கட்சி பிரமுகர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

குற்றச்சாட்டுகளின்படி, இரண்டு திரிணாமுல் கட்சி உறுப்பினர்கள் நேற்று பெலேகாட்டாவில் உள்ள பிஜேபி தொண்டரான சிவசங்கர் தாஸின் வீட்டிற்குள் புகுந்து அவரது எட்டு மாத கர்ப்பிணி மருமகளைத் தாக்கியுள்ளனர்.

பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலத் தகராறு காரணமாக அந்தப் பெண் தாக்கப்பட்டுள்ளார். இது சிவசங்கர் தாஸுக்கும் அவரது மாமியார் சாந்தி தேவி சிங்குக்கும் இடையேயான குடும்பத் தகராறு எனக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் தகராறு தொடர்பாக சிவசங்கர் தாஸ் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்த நிலையில், இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ் பால் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், பாஜக பொய் சொல்கிறது என்று கூறியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்