Sri Lankan Tamil : இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியாக பொதுமக்களிடம் யாசகம் பெற்ற 10 ஆயிரம் பணத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் பூல்பாண்டி வழங்கினார்.
முதல்வர் கோரிக்கை
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கயில் உள்ள தமிழர்களுக்கு தங்களால் ஆன உதவியை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
யாசகர் நிவாரணம்
இத்தகவலை அறிந்த தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகனை நேரில் சந்தித்து, பொதுமக்களிடம் யாசகம் பெற்ற 10 ஆயிரம் பணத்தை இலங்கை தமிழர் நிவாரண நிதியாக வழங்கினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு யாசகர் பூல்பாண்டி, இலங்கை தமிழர் நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ரூபாய் 50,000 வழங்கியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…