கர்நாடக மாநிலம் விஜயநகரை சேர்ந்தவர் ஆனந்தராஜு. இவர் ஹம்பி பகுதியில் ஆட்டோ டிரைவராகவும், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகவும் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சமூக சேவகரான கெமில் எனும் பெண், 4 வருடத்திற்கு முன்பு குடும்பத்துடன் ஹம்பிக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளனர். அப்போது, ஆனந்தராஜு அவர்களுக்கு உதவி செய்துள்ளார். இதனால், ஆனந்தராஜுக்கும் கெமிலுக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், ஆனந்தராஜுவின் நேர்மையை பார்த்து கெமில் அவரை காதலிக்கும் ஆரம்பித்துள்ளார். இதையடுத்து, இரு வீட்டாரும் பேசி, இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நடக்கவிருந்த இந்த காதல் ஜோடியின் திருமணம் கொரோனாவால் நடக்காமல் போனது. இந்த நிலையில், 4 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு இந்த காதல் ஜோடிக்கு இன்று இந்து முறைப்படி ஹம்பி கோயிலில் கோலாகலமாக திருமணம் முடிந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…