ஐரோப்பிய பாராளுமன்றம் ரஷ்யாவை உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் நடவடிக்கைகளுக்காக, பயங்கரவாதத்தின் அரசு ஆதரவாளர் என்று அழைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பு 494-58 என்ற அளவில் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இதில் 48 பேர் வாக்களிக்கவில்லை.
ஐரோப்பிய ஒன்றிய சட்டமன்றம் பிப்ரவரி 24 அன்று படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான எவரையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் அழுத்த கொடுக்க வலியுறுத்தியுள்ளது.
27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் படையெடுப்பை மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்துள்ளதுடன், கடந்த 10 மாதங்களில் பல ரஷ்ய நடவடிக்கைகள் போர்க்குற்றங்கள் என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…