Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டில் வெடிவிபத்து.. 6 பேர் பலியான பரிதாபம்!!

Sekar July 24, 2022 & 18:24 [IST]
வீட்டில் வெடிவிபத்து.. 6 பேர் பலியான பரிதாபம்!!Representative Image.

பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

பட்டாசு தயாரிக்கும் வீட்டில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"சாப்ராவில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெடிப்புக்கான காரணத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். தடயவியல் குழு மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது" என எஸ்பி சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். 

கைரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோதைபாக் கிராமத்தில் உள்ள ரியாஸ் மியான் என்ற நபரின் வீட்டில் அதிக அளவில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

பட்டாசு வியாபாரியான ரியாஸ் மியான் திருமணத்தின் போது சட்டவிரோதமாக பட்டாசுகளை விற்றதாக கூறப்படுகிறது.

இந்த வெடிவிபத்தில் வீடு முற்றாக அழிக்கப்பட்டது. மேலும் ஆறுக்கும் மேற்பட்ட அடுத்தடுத்த வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட மூன்று உடல்களை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர், அவை இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இடிபாடுகளுக்குள் மேலும் 5 பேர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் சப்ராவில் உள்ள சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்