Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

“பாஜகவினர் செய்தது தவறுதான்”ஆர்பி உதயகுமார்.

Muthu Kumar August 14, 2022 & 17:45 [IST]
“பாஜகவினர் செய்தது தவறுதான்”ஆர்பி உதயகுமார்.Representative Image.

மதுரை முனிச்சாலையில் உள்ள பள்ளியில் விளையாட்டு நிகழ்ச்சியை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணின் உடல் கொண்டு வரப்பட்டது. பொதுவாகவே இதுபோன்ற நிகழ்வுகளில், தமிழக அரசுக்கு அஞ்சலி செலுத்துவதில் முன்னுரிமை கொடுக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நிதியமைச்சர் வார்த்தையை கடுஞ்சொல்லாக நினைத்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். உணர்ச்சி கொந்தளிப்பில் விரும்பத்தகாத வகையில் பாஜக தொண்டர்கள் நடந்து கொண்டது வேதனையளிக்கிறது” என கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பை தமிழக அரசு தடுக்க வேண்டும். அதேபோல் ஆன்லைன் சூதாட்டத்தையும் தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்