மோடி அரசு தொடர்ந்து மக்கள் விரோத கொள்கையை செயல்படுத்தி வருவதோடு மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டிருந்த தொல்.திருமாவளவன் அங்கு நடந்த உலக ஹலால் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று நாடு திரும்பியுள்ளார்.
நாடு திரும்பிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்தும் நாடு தழுவிய அளவில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதாக காட்டமாக தெரிவித்ததோடு, தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…