மாமல்லபுரத்தில் நாளை(ஜூலை 28) செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்க உள்ள நிலையில், இதற்காக தமிழக அரசு மாநிலம் முழுவதும் விளம்பரம் செய்திருந்தது. அதில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறவில்லை என பாஜகவினர் குற்ற சாட்டி வந்தனர். இதனையடுத்து பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் என்பவர் தமிழக அரசு விளம்பரத்தில் மோடியின் புகைப்படத்தை ஓட்டினார். இதே போன்று இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஓட்டினார்.
மேலும் இது குறித்து பேசிய அமர் பிரசாத் ‛இது திமுக நிகழ்ச்சி அல்ல. சர்வதேச செஸ் ஒலிம்பிக் போட்டி. பிரதமர் புகைப்படத்தை போடாதது மிகப் பெரிய குற்றம்' என தெரிவித்தார். இந்நிலையில் அவர் ஒட்டிய மோடி புகைப்படத்தின் மீது தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கருப்பு பெயிண்ட் அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்த 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, நாளை மறுநாள் துவங்கி, ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடக்கிறது. சென்னையில், நாளை துவக்க விழா மற்றும் ஆக., 10ல் நிறைவு விழா நடக்கிறது. இப்போட்டியில், சர்வதேச 187 நாடுகளைச் சேர்ந்த 350 அணிகளின், 2,000க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…