Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நள்ளிரவில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா கைது - என்ன காரணம்...?

Chandrasekaran Updated:
நள்ளிரவில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா கைது - என்ன காரணம்...?Representative Image.

சென்னை: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யாவை போலீசார் நள்ளிரவில் கைது செய்த சம்பவம், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. இவர் அண்ணாமலையுடன் நெருக்கமாக இருப்பவர் என்று கூறப்படுகிறது. பாஜக சார்பில் ஊடக விவாதங்களில் அடிகடி பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், மதுரையில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளர் உயிரிழந்தார் என்றும், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக போலீசார் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் தி.நகரில் வைத்து கைது செய்தனர்.

நள்ளிரவில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா கைது - என்ன காரணம்...?Representative Image

இந்த தகவலை அறிந்த பாஜகவினர் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்தனர். கைதை கண்டித்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா கைது செய்யப்பட்டதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள். விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக அரசு எதிர் கருத்துகள் கூற நினைப்பவர்களின் குரலை முடக்க பார்க்கிறது. அரசை விமர்சனம் செய்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக போக்கு தமிழகத்தில் நிலவுகிறது, என்று குற்றச்சாட்டியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்