தமிழகத்தில் மாநிலம் முழுவதும் இன்று சுமார் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் இடங்களில் இன்று 31வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் ஒரு தவணை செலுத்தாதவர்கள், பூஸ்டர் டோஸ் செலுத்தாததவர்கள் பயனடையும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…