Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாஜக யுவமோர்ச்சா தொண்டர் கொலை வழக்கு என்ஐஏவிடம்.. கர்நாடக அரசு அதிரடி முடிவு!!

Sekar July 29, 2022 & 15:48 [IST]
பாஜக யுவமோர்ச்சா தொண்டர் கொலை வழக்கு என்ஐஏவிடம்.. கர்நாடக அரசு அதிரடி முடிவு!!Representative Image.

கர்நாடக பாஜக யுவமோர்ச்சா தொண்டர் பிரவீன் நெட்டாரு கொலை வழக்கு விசாரணையை கர்நாடக அரசு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைத்துள்ளது என்று முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று தெரிவித்தார்.

தட்சிண கன்னடா மாநிலம் பெல்லாரேயில் பிரவீன் நெட்டாருவை பைக்கில் வந்த இருவர் வெட்டிக் கொன்றனர். எனினும், பாஜக இளைஞரணி தலைவர் பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கர்நாடக காவல்துறை நேற்று கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்கள் ஹாவேரி மாவட்டம் சவனூரைச் சேர்ந்த ஜாகீர் (29), பெல்லாரைச் சேர்ந்த முகமது ஷபிக் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நெட்டாருவைக் கொலை செய்வதற்கான சதித்திட்டத்தின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொலையானது கடந்த புதன்கிழமை தட்சிண கன்னடா மாவட்டத்தில் பல இடங்களில் பதற்றம் மற்றும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்