Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சூட்டோடு சூட்டா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!

Bala July 29, 2022 & 15:37 [IST]
 சூட்டோடு சூட்டா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!Representative Image.

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த தேவையான  நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

சென்னையில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக புகழ்ந்து தள்ளினார். இதனையடுத்து திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மிக சிறப்பாக செய்துள்ளதாக பாரட்டு தெரிவித்தார். 

இதனையடுத்து இன்று அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, விழாவை முடித்துக்கொண்டு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் தான் கையோடு கையாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில்,  ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த தேவையான  நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய அரசு விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கை தேவை என கேட்டுக்கொண்டுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்