தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ளூர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஏலம் எடுப்பது போல் வீரர்களை அணியின் உரிமையாளர்கள் ஏலம் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி பாத்திமா நகர் கிரிக்கெட் கழகம் சார்பில் அவர் லேடி ஆப் பாத்திமா(OLF) 20 ஓவர் கிரிக்கெட் கோப்பைக்கான போட்டிகள் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் 7அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த ஏழு அணியில் விளையாட உள்ள சுமார் நூறு வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ஏழு அணிகளின் உரிமையாளர்கள் தங்களது அணியில் விளையாடக்கூடிய வீரர்களை ஐபிஎல் கிரிக்கெட் அணியில் வீரர்களை ஏலம் எடுப்பது போல் ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் நான்கு பேர் ரூ.7000-க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…