Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முதல்வர் வீட்டிற்கு வெடுக்குண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி...அலேக்காக தூக்கிய போலீஸ்..!

madhankumar May 23, 2022 & 12:49 [IST]
முதல்வர் வீட்டிற்கு வெடுக்குண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி...அலேக்காக தூக்கிய போலீஸ்..!Representative Image.

சென்னையில் உள்ள தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் வீட்டிற்கு நள்ளிரவில் போதை ஆசாமி ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தியடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தது எனக்கு ஏற்பட்ட சொத்து தகராறில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, அதனால் முதல்வர் வீட்டில் வெடுக்குண்டு வைத்துள்ளேன் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து மோப்பநாயின் உதவியுடன் போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து வெடிகுண்டு விடுத்த நபர் குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜ் என்பது தெரியவந்தது. மது போதையில் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதேபோன்று சில நாட்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த தாமரை கண்ணன் என்பவர் கஞ்சா போதையில் முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்