தமிழக காவல் துறை தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு கடந்த 17-ம்தேதி அழைப்பு ஒன்று வந்தது. அதில் எதிர்முனையில் பேசிய மர்ம நபர், தமிழக முதல்வர் வீடு மற்றும் விமானநிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு, இணைப்பைத் துண்டித்து விட்டார்.
இதனையடுத்து போலீசார் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டை தேடும் பணியில் ஈடுபட்டனர். அனால் அந்த மர்ம நபர் கூறிய படி அங்கு ஏதும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனையடுத்து நடந்த விசாரணையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுந்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன்(25), என்பவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.இதையடுத்து, சுத்தமல்லி சென்ற போலீஸார் தாமைக்கண்ணனை நேற்று கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…