Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பேரறிவாளன் குற்றவாளி தான்.. புகைச்சலைக் கிளப்பிய காங்கிரஸ் தலைவர்!!

Sekar May 19, 2022 & 21:41 [IST]
பேரறிவாளன் குற்றவாளி தான்.. புகைச்சலைக் கிளப்பிய காங்கிரஸ் தலைவர்!!Representative Image.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் காட்டமாக பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளிகள் ஏழுபேரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. ஆனால் அதே உச்சநீதிமன்றம் இப்போது சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்." எனக் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்