Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! அவசரமாக தரையிறக்கம்..!

Muthu Kumar August 09, 2022 & 16:30 [IST]
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! அவசரமாக தரையிறக்கம்..!Representative Image.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் விமான நிலையத்திற்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் 175 பயணிகளோடு கிளம்பியது.

இந்நிலையில், விமானம் பெங்களூர் விமான நிலையம் அடைய சில நிமிடங்கள் இருந்த நிலையில் விமானத்தின் கழிவறையில் இருந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. இந்த கடிதத்தை விமான பணிப்பெண் கண்டெடுத்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் விமானிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, விமானம் தரையிறக்கப்பட்டதும் வேகமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், பாதுகாப்பு கருதி வேறொரு விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்