இங்கிலாந்து நாட்டில் உள்ள ஹாவர்போர்ட்வெஸ்டில் என்ற ஒரு சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதலே இந்த சூப்பர் மார்க்கெட் மூடப்பட்ட நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சூப்பர் மார்க்கெட்டை தற்போது இடிப்பதாக முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு, சூப்பர் மார்க்கெட் இருக்கும் இடத்தை இடித்து விட்டனர். மேலும், அந்த இடத்தில் தொடர்ந்து குழி தோண்டி உள்ளனர். அப்போது, அங்கு இருந்தவர்களுக்கு அதிர்ச்சியைத் தரும் வகையில் ஒன்று நடந்துள்ளது. இவ்வாறு குழி தோண்டிய போது, அதில் ஏராளமான எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது.
மேலும், இந்த எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 100 குழந்தைகள் உட்பட, 240 பேரின் எலும்புக் கூடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. குழி தோண்ட தோண்ட, எலும்புக் கூடுகள் கிடைத்ததால், அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர். இது குறித்து, தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியதாவது,”தற்போது கிடைத்துள்ள எலும்புக்கூடுகள் 300 ஆண்டுகளுக்கு முன்பாக புகைப்பட்டவையாக இருக்கலாம் எனவும், அந்த இடம் ஒரு கல்லறையாக இருந்திருக்கலாம் எனவும்” கூறியுள்ளனர்.
வெகு நாள்களாக மூடப்பட்ட டிபார்ட்மென்ட் ஸ்டோரைத் தோண்டிய போது கிடைத்த இந்த எலும்புக் கூடுகளால், அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…