Seaman : தமிழக அரசு டாஸ்மாக்கில் அமோகமாக விற்பனை செய்யும் விஸ்கி, பிராந்தி, பீர் போன்றவைகள் என்ன புனித நீரா..? என சீமான் கேள்வி எழுப்பினார்.
வேட்டை 2.0
தமிழக காவல்துறை ஆப்பரேஷன் வேட்டை 2.0 என்ற வேட்டையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தினர். இந்த வேட்டையில் கஞ்சா மொத்ஹ்ட வியாபாரிகள் மற்றும் சில வியாபாரிகள் பிடிபட்டனர்.
கஞ்சா பறிமுதல்
வேட்டை 2.0 நடைபெற்ற ஒரே மாதத்தில் 2,423 வியாபாரிகள் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 3600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன என்றும் 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துரையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சீமான்
இந்நிலையில் தமிழக அரசின் இந்த செயலை பாராட்டியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இக்குற்றங்களில் ஈடுபடுவோர் பெயரில் இருக்கும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சட்டசபையில் தமிழக முதல்வர் அறிவித்த செய்தி படித்தேன். பாராட்டுக்கள்.
ஆனால் குட்கா, கஞ்சா போன்ற பொருட்கள் போதை பொருட்கள் என்றால், டாஸ்மாக்கில் தமிழக அரசே அமோகமாக விற்கும் விஸ்கி, பிராந்தி, பீர் போன்றவைகள் என்ன புனித நீரா..? போதை பொருட்களில் சிலவற்றுக்கு தண்டனையும், சிலவற்றை அரசே விற்பதும் தான் திராவிட மாடலா..?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…