ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் விளை நிலங்களுக்குள் பெருக்கெடுத்து ஓடி பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி கால்வாயில் மழை நீர் வடிகால் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு கால்வாயில் வரும் தண்ணீர் முழுமையாக வெளியேறி வருகிறது..
இதனால் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் தற்போது நீரில் மூழ்கியுள்ளன..
கால்வாய் கரையோரம் இருந்த வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பவானிசாகர் அணையில் இருந்து கால்வாயில் விநாடிக்கு 1300 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…