Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 10 கிராம மக்கள் தவிர்ப்பு! 

Kanimozhi Updated:
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 10 கிராம மக்கள் தவிர்ப்பு! Representative Image.

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மெய்யூர்  தரைப்பாலம் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 

மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் இரவு கொட்டி தீர்த்த கனமழை காரணமாக  பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு  வினாடிக்கு 2,005 கன அடி வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் மொத்த உயரம் 35 அடி உயரத்தில் தற்போது  33.54 உயரத்தில் நீர் நிரம்பி உள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி, கொசஸ்தலை ஆற்றுக்கு விநாடிக்கு 150 கன அடி தண்ணீர் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இது அப்பகுதியில் பத்துக்கு மேற்பட்ட ஏரிகளில் நிரப்பப்பட்டு வருகிறது.  கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் மெய்யூர் தரைப்பாலம் காட்டாற்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

 இதனால் மெய்யூர் ஆவாஜிபேட்டை, வெம்பேடு, செம்பேடு, வெங்கல், மாளந்தூர், எரையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம் அரும்பாக்கம், மேலனுர், மூலக்கரை உள்ளிட்ட 10 மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் திருவள்ளூர்  மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு  25 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை இருந்து வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்