திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி, திருச்சியில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். திண்டுக்கல்லை சேர்ந்த இவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்துவந்துள்ளார்.
இவர் திடீரென நேற்று விடுதியின் மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் அவருடைய கால் மற்றும் விலா எலும்பு முறிந்துள்ளது. விடுதியில் இருந்த நிர்வாகிகள் மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து கோட்டை காவல்துறையினர் மாணவியின் பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது தங்களின் கட்டாயத்தின் பேரில் தான் மாணவி விடுதியில் தங்கி படித்தார். அதனால் தான் நாங்கள் போலீசில் இதுவரை புகார் அளிக்க வில்லை என கூறியுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகமும் தாங்கள் எந்தவித புகாரும் கொடுக்க முன்வரவில்லை என்று தெரிவித்தனர். இதனையடுத்து நடந்த விசாரணையில், பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் விடுதியில் சேர்க்கப்பட்ட மாணவி வீட்டிற்கு செல்ல முடியாது என்ற மன உளைச்சலில் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…