அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், 14 பெண்களிடம் நகைகளை ஒரு ஆண் கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்தனர்.
லதன் ஜான்சன் (37) என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி வயது முதிர்ந்த இந்து பெண்களை குறிவைத்து, ஜூன் மாதம் தொடங்கி, கடந்த இரண்டு மாதங்களில் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
பாலோ ஆல்டோவில் வசிக்கும் ஜான்சன், குறிப்பாக 50 முதல் 73 வயதுக்குட்பட்ட பெண்களை தாக்கி, அவர்களது கணவர்களையும் தாக்கி நகையை எடுத்துக் கொண்டு, காரில் எஸ்கேப்பாவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணை மூலம் ஜான்சன் கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஜான்சனுக்கு அதிகபட்சமாக 63 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறும். திருடப்பட்ட நெக்லஸ்கள் அனைத்தும் தோராயமாக 35,000 டாலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…