Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் எரிப்பு....போலீசார் அதிரடி..!

madhankumar June 26, 2022 & 13:51 [IST]
2 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் எரிப்பு....போலீசார் அதிரடி..!Representative Image.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதை விற்ற வியாபாரிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரே இடத்தில் குவிக்கப்படும் போதைப் பொருட்களால் ஆபத்து நேரிடகூடும். மேலும் போதிய இடவசதி இல்லாததையும் கருத்தில் கொண்டு அவற்றை அழிக்க போலீசார் முடிவு செய்தனர்.

இதுவரை 60 வழக்குகளில் 1,300 கிலோ கஞ்சா, 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது இதன் மதிப்பு ரூ.2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தினமான நேற்று இந்த போதைப் பொருட்களை எரித்து அழிப்பதற்கு போலீசார் திட்டமிட்டனர். அதன் படி ரசாயன பொருட்களை எரிக்கும் இடத்தில், 1,000 டிகிரி வெப்பத்தை தாங்கும் எந்திரத்தில் போதைப் பொருட்கள் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் அழிக்கப்பட்டன. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்