சென்னை பூந்தமல்லி அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூந்தமல்லி காட்டுப்பாக்கம் அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தொழிற்சாலையில் மெட்ரோ இரயிலுக்கு தேவையான இரும்பு தகடுகளை செய்துவருவதாக தெரிகிறது. இந்த சூழலில் தற்போது தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தீ விபத்து நடந்த கட்டிடத்தில் இருந்த பெயிட், மர சாமான்கள், கெமிக்கல்கள் அதிகமாக இருப்பதால் தீ கொழுந்துவிட்டு இருந்துவருகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு தொழிற்சாலைகள் அருகில் வீடுகள் இருப்பதால் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவும் என அஞ்சி அப்பகுதியில் இருக்கும் மக்கள் அலறியடித்து ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…