Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசியலுக்காக கொச்சைப்படுத்த வேண்டாம்.. அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்!!

Sekar June 15, 2022 & 19:04 [IST]
அரசியலுக்காக கொச்சைப்படுத்த வேண்டாம்.. அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்!!Representative Image.

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற ஆணையை மதித்து நடக்க வேண்டும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக அரசு பெங்களுருவின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்காக எனக் கூறிக்கொண்டு மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது சட்டத்துக்கு புறம்பானது என்று கண்டித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அரசியலுக்காக கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல என்றும் 4.75 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக என்ற போர்வையில் 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஒரு பெரிய அணையை கட்ட கர்நாடகா முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் பல்வேறு மாநிலங்களில் பாயும் நதி தொடர்பான விவகாரத்தில் ஒரு மாநிலம் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும், இந்த விவகாரத்தில் கர்நாடகா உச்சநீதிமன்ற ஆணையை பின்பற்றி நடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்