தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளா்களை சந்தித்த அவர், “அரசுப் பேருந்துகளுக்கு காப்பீடு செய்வது குறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி மூலம் வட்டார அலுவலகங்களில் காலியாக உள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், பேருந்தில் பயணிக்கும் பெண்களை முறைத்துப் பாா்க்கும் ஆண்களை இறக்கி விடுவது குறித்து மோட்டாா் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக சென்னை மாநகர பேருந்துகளில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…