சண்டிகர் பல்கலைக்கழக மாணவி ஒருவர் சக மாணவிகள் குளிப்பதை வீடியோவாக எடுத்து வெளியிட்டதாக வெடித்த சர்ச்சையைத் தொடர்ந்து, தங்கள் கடமையைச் சரியாகச் செய்யாததற்காக இரண்டு விடுதி வார்டன்களை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.
மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவதால், பதற்றத்தைத் தணிக்கும் வகையில், பல்கலைக்கழகத்திற்கு வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வாரம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்தும் மாணவர்களிடம் டிஐஜி ஜிஎஸ் புல்லர் நேற்று இரவு சமாதானப்படுத்தும் வகையில் பேசினார். இதையடுத்து சில மாணவர்கள் போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், ஹாஸ்டல் குளியலறையில் வீடியோ எடுத்து பரப்பப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்போம் என்றும் கூறினர்.
இதற்கிடையே ஹாஸ்டலில் மாணவி வீடியோ எடுத்து சிம்லாவில் உள்ள ஒருவருக்கு அனுப்பியதாகக் கூறப்பட்ட நிலையில், மாணவி மற்றும் இதில் தொடர்புடைய சிம்லாவைச் சேர்ந்த 31 வயதான ரங்கஜ் வர்மா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…