சந்திரயான் 3 விண்கல பயணத் திட்டம் வெற்றிகரமாக அமையும் என்றும், இரண்டாவது திட்டம் தோல்வியுற்ற போது அதில் கண்டறியப்பட்ட தவறுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு, இந்த முறை மிகச் சரியாக திட்டமிடப்பட்டிருப்பதாகவும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்து இருக்கிறார்.
இதன் காரணமாக ஜூலை மாதத்தில் விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-3 விண்கல பயணம் வெற்றிகரமாக அமையும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, விண்வெளி திட்டங்கள் தொடர்பாக செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக இரு நாடுகள் மட்டுமல்லாமல், உலகளாவிய விண்வெளி திட்டத்திற்கும் அது பயனளிக்கும் என மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…