சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் தெரு பெயரில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கம் செய்யும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் உள்ள சுமார் 10 ஆயிரம் தெருக்களில் உள்ள பெயர் பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயக சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பெயர்பலகையில் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெரும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்காக ரூ.8.43 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பணிகளுடன் சேர்த்து சென்னை மாநகராட்சியில் உள்ள தெருக்களின் பலகைகளில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சியின் 171 வார்டு பகுதியில் உள்ள தெருவிற்கு அப்பாவோ கிராமணி 2-வது தெரு என்று பெயர் இருந்தது, இந்த பெயரை மாற்றக்கோரி திராவிடர் விடுதலை கலக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது, அதனால் இந்த தெருவிற்கு அப்பாவு (கி) தெரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது போல ஜாதி பெயர்கள் உள்ள தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…