Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னை Ford-ன் கடைசி கார்..! கண்ணிர் மல்க வழியனுப்பிய ஊழியர்கள்..!

Muthu Kumar July 21, 2022 & 12:05 [IST]
சென்னை Ford-ன் கடைசி கார்..! கண்ணிர் மல்க வழியனுப்பிய ஊழியர்கள்..!Representative Image.

தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஃபோர்டு கார் தொழிற்சாலை ஜூலை 31 ஆம் தேதியுடன் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மறைமலைநகரில் செயல்பட்டு வந்த ஃபோர்டு கார் தொழிற்சாலை நஷ்டம் காரணமாக மூடப்பட உள்ள நிலையில் அந்த தொழிற்சாலையை மீண்டும் இயக்க பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், எந்த நடவடிக்கையும்  பலனளிக்கவில்லை. இதனால் தொழிற்சாலை மூடப்படுவதால் நேரடியாக 4,100 தொழிலாளர்கள் மற்றும் மறைமுகமாக 25,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை தனது கடைசி காரான ECO ஸ்போர்ட்ஸ் காரை தயாரித்துள்ளது. இந்த காரை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அலங்கரித்து கண்ணீர் மல்க அனுப்பி வைத்தனர். 

மேலும், தமிழகத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த இந்த ஃபோர்டு தொழிற்சாலை ஜூலை 31 ஆம் தேதியுடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்