தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் அறிவிக்கப்பட்ட துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி ஆணையாளர், துணை பதிவாளர் உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளிக்கான 92 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை எழுத்து தேர்வுக்கு http://tnpsc.gov.in இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 27 முதல் 29 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், குரூப்-1 ல் உள்ள மற்ற தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…