பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் செயலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்க்கு பாலிடெக்னிக் சீருடையில் இருந்த மாணவன் ஒருவன் மஞ்சள் கயிறு கொண்டு தாலி கட்டிய வீடியோ இணையத்தில் வைராலகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து கடந்த மாதம் 10-ம் தேதி இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு பள்ளி மாணவியின் வீட்டுக்கு நேரடியாக சென்று அவரை அரசு காப்பகத்தில் சேர்த்தது.
இந்நிலையில், தனது மகளை குழந்தைகள் நலக்குழுவினர் எதற்காக அழைத்துச் சென்றனர் எனத் தெரியவில்லை எனக் கூறிய மாணவியின் தந்தை, சிறுமியை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, மாணவியை உடனடியாக விடுவித்து பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சிறுமியை குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டதாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் முழுமையாக எந்தவொரு விசாரணையும் நடத்தாமல் அவசர கதியில் செயல்பட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் போலீசாரின் செயல் குறித்தும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…