சென்னையின் உள்ள நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடையே சைதாப்பேட்டை-சின்னமலை பகுதியில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிராட்வேயிலிருந்து அஸ்தினாபுரம் செல்லும் 52B என்ற அரசு பேருந்து சைதாப்பேட்டை சின்னமலையை கடந்து சிக்னலில் நின்றுகொண்டிருந்தது. அப்போது சுமார் 20 க்கும் மேற்பட்ட நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கி வந்த நிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அனைவரையும் உள்ளே வரும்படி தெரிவித்துள்ளனர்.
இதனால் மாணவர்களுக்கும், ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்தை சாலையில் நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியில் வந்த அனைத்து மாநகர பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்வரை பேருந்துகளை இயக்கமாட்டோம் என்று கூறி, பேருந்தை சாலையில் ஆங்காங்கே நிறுத்தியதால், அங்கு சுமார் அரைமணி நேரம் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர்கள் மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மேலும் விசாரணைக்காக நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் சிலரை காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…