டிடிஎஃப் வாசனின் ஆபத்தான பைக் சவாரிகள் குறித்து புகார் அளிக்கப்பட்ட ஒரு ட்வீட்டுக்கு சென்னை காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளது.
பூவை ஷக்கீர் கான் என்ற ட்விட்டர் பயனர், டி.டி.எஃப் வாசன் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், நெடுஞ்சாலையில் 247 கிமீ வேகத்தில் பைக் சவாரி செய்த படத்தையும் ட்விட்டரில் தமிழக காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், நோட் பண்ணிட்டோம் என சென்னை பெருநகர காவல்துறை பதிலளித்துள்ளது.
மோட்டோ வி-லாக் செய்யும் யூடியூபர் டிடிஎஃப் வாசன் 2.7 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்ட ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய ரசிகர்களுடன் சமீபத்தில் கோவையில் நடத்திய பிறந்தநாள் கொண்டாட்ட மீட் அப் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் தனது பைகில் மணிக்கு 247 கிமீ வேகத்தில் செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார். "ஆனது ஆகட்டும் பார்த்துக்கலாம்" என்று கூறி, இந்திய சாலைகளில் அனுமதிக்கப்படாத மணிக்கு 247 கிமீ வேகத்தைத் தொடும் வரை தனது பைக்கில் சென்றுள்ளார்.
மிக அதிக அளவில் 2k கிட்ஸ் பாலோயர்களை கொண்டுள்ள வாசனின் இந்த செயல், இளைஞர்கள் மத்தியில் மிக ஆபத்தான போக்கை ஏற்படுத்தும் என்றும், இதை தடுக்க வாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை டிராபிக் போலீஸ் மற்றும் தமிழ்நாடு போலீசின் ட்விட்டர் பக்கங்களை குறிப்பிட்டு ட்விட்டரில் இதுகுறித்து ஒருவர் புகார் அளித்திருந்தார். அதற்கு நோட் பண்ணிட்டோம் என சென்னை பெருநகர காவல்துறை பதில் அளித்துள்ளது. இதனால் விரைவில் வாசன் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…