Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

"பெற்றோரிடம் மனம் விட்டு பேசுங்கள்" விஜயகாந்த் அறிவுரை..!

Muthu Kumar July 26, 2022 & 17:45 [IST]
Representative Image.

தமிழகத்தில் மாணவிகளின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் மனம் விட்டு பேச வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் வைத்துள்ளார். 

இந்நிலையில், இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்கொலை முடிவு எதற்கும் தீர்வாகாது என்பதை மாணவ மாணவிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் மாணவர்கள் அதனை மனதில் வைத்துக் கொள்ளாமல் பெற்றோரிடமும் அல்லது ஆசிரியரிடம் மனம் விட்டு பேசுங்கள் என்றும் அப்போது தான் அதற்கு உரிய தீர்வு காண முடியும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், அவ்வாறு மனம் விட்டு பேசினால்தான் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உங்களை விட்டு உடனே நீங்கும் என கூறியுள்ளார். 

மேலும், “நாட்டின் எதிர்கால தூண்களான மாணவ-மாணவிகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் மனதை உறுதியோடு வைத்துக்கொண்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டும்” என அறிவுரை வழங்கியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்