சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று மூன்றாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று 3 மணியளவில் தொடங்கிய 3-வது சுற்றுறில் இந்தியா சார்பில் 6 அணிகள் களமிறங்கி விளையாடின.
இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்தியா வெற்றிப் பெற்றார். இந்த போட்டியில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த எதிரணி வீராங்கனையை வீழ்த்திய நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து, இந்தியாவின் ரவுனக் சத்வானி 3-வது சுற்றில் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் சுவிஸ் வீரர் பேபியனை வீழ்த்திய இந்தியாவின் ரவுனக் சத்வானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்தியாவில் பொதுப்பிரிவு ஏ அணியில் விளையாடிய ஹரி கிருஷ்ணா வெற்றிப் பெற்றுள்ளார். மேலும், இந்திய பொதுப்பிரிவு சி அணியில் விளயைாடிய அபிஜித் குப்தாவும் வெற்றிப் பெற்றுள்தாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…