சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் அலங்கரிக்கப்பட்டுள்ள புகைப்படம் வைரலாக பகிரப்பட்டுள்ளது.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. அதன்படி, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருபவர்களை வரவேற்க்கும் விதமாக விளம்பரபடத்தில் தமிழக முதல்வர் நடித்துள்ளார். மேலும், இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நிகழ்விற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ள வரும் பல நாட்டு வீரர்கள், வீராங்கனைளுக்கும் உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு குரங்கம்மை, கொரோனா பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தீம் சாங்கை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தயாரித்துள்ளார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை சிறப்பிக்கும் விதமாக சென்னையில் உள்ள பிரபலமான நேப்பியர் பாலத்தில் செஸ் பலகையில் உள்ளது போல வெள்ளை, கருப்பு கட்டங்கள் வரைந்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…