பாஜகவின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் இன்று துவங்குகிறது. இந்த கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, 19 மாநில முதலமைச்சர்கள், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மிகப்பெரிய அளவில் நடத்தப்பட இருக்கும் இந்த கூட்டத்திற்காக ஹைதராபாத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவின் கொடிகள், பதாகைகள், பேனர்கள், என பல வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சாதனைகளைப் பறைசாற்றும் வகையில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் மற்றும் தேசிய நிர்வாகிகள் கூடி ஆலோசிக்கின்றன.
நாளைய கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென் மாநிலங்களில் பாஜகவின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதே இந்த கூட்டத்தின் நோக்கம் என பாஜகவின் சில முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஹைதராபாத்துக்கு இன்று (02/07/2022) வரும் பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், மீண்டும் புறக்கணிக்கிறார். ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வரும் பிரதமரை மாநில அமைச்சர்களின் ஒருவர் மட்டுமே வரவேற்க உள்ளதாக தகவல் கூறுகின்றன. கடந்த ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாகப் பிரதமர் நரேந்திர மோடியை, தெலங்கானா முதலமைச்சர் புறக்கணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதமரின் வருகையை புறக்கணித்துவிட்டு தெலங்கானாவிற்கு வருகை தரும் எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்டபாளர் யஷ்வந்த் சின்ஹாவை தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் மற்றும் மாநில அமைச்சர்கள் வரவேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…