இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை போர் நினைவு சின்னத்தில் இருந்து போலீசார் மோட்டார் சைக்கிள் புடைசூழ அழைத்து வந்தனர்.
இதனையடுத்து, கோட்டையின் முன்பாக காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
மேலும், காவல்துறையினர் பேண்ட் வாத்திய இசையுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது ஆண்டாக கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…