இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருkஇறது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின சிறப்புரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்திய பின்னர் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார். மேலும், இந்தியாவில் உள்ளா குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என கூறினார்.
இதனையடுத்து, இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, உலகம் முழுவதும் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன.
மேலும், விடுதலை போராட்ட தமிழக வீரர்களான வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத் தலைவர்களை நினைவு கூறுகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…