Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

‘என்ன நடக்குது’... எழிலகத்திற்கு திடீரென விசிட் அடித்த மு.க.ஸ்டாலின்! 

Kanimozhi Updated:
‘என்ன நடக்குது’... எழிலகத்திற்கு திடீரென விசிட் அடித்த மு.க.ஸ்டாலின்! Representative Image.

மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக கனமழை பெய்து வருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்களிடையே அந்தப் பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து காணொளி காட்சி வாயிலாக  கேட்டறிந்தார். அரசு மூலமாக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், முழு ஒத்துழைப்பு தந்தால் அது வெற்றிகரமானதாக மாறும் என்றும் பொது மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரத்தில் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முகாம்களில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்