தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியும் தொடங்கியது. மேலும், இந்த பேரணியில் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு , பாராளுமன்ற உறுப்பினர்களாக கனிமொழி, தயாநிதி மாறன் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த அமைதி பேரணியில் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்துக் கொண்டு பங்கேற்றனர்.
மேலும், ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கிய அமைதி பேரணி மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. மேலும், கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…