இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், ராம்நாத் கோவிந்க்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வந்த நிலையில் அவரது ஆட்சிக்காலம் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதனால் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரான திரௌபதி முர்மு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிவடைந்தது. இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்தார். இதனால் ராம்நாத் கோவிந்த்க்கு பல மாநில அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதன்படி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், “குடியரசு தலைவராக எங்கள் மாநிலத்திற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. தங்களின் வளமான அனுபவத்தால் நாடு தொடர்ந்து பயன்பெறும் என உறுதியாக நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…