Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஊழியர்கள் கவனக்குறைவு.. பள்ளி அறையில் 18 மணி நேரம்.. சிறுமிக்கு நேர்ந்த அவலம்!!

Sekar September 23, 2022 & 18:59 [IST]
ஊழியர்கள் கவனக்குறைவு.. பள்ளி அறையில் 18 மணி நேரம்.. சிறுமிக்கு நேர்ந்த அவலம்!!Representative Image.

உத்தரப்பிரதேசத்தின் சாம்பல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஊழியர்கள் கவனிக்காமல் வகுப்பறைகளை பூட்டிச் சென்றதால், 7 வயது சிறுமி 18 மணி நேரம் வகுப்பறைக்கு உள்ளேயே இருந்துள்ளார்.

நேற்று காலை பள்ளி திறந்தபோதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பாத நிலையில், மாணவியின் பாட்டி பள்ளிக்கு வந்து விசாரித்துள்ளார். அப்போது பள்ளியில் மாணவிகள் யாரும் இல்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிறுமியை உறவினர்கள் பல இடங்களிலும் தேடி அழைத்துள்ளனர். இந்நிலையில், அடுத்த நாள் காலையில் பள்ளி வகுப்பறைகளை திறந்தபோது சிறுமி உள்ளே இருந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தொகுதி கல்வி அதிகாரி போப் சிங் கூறுகையில், "குன்னூர் தாலுகாவின் தானாரி பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி செவ்வாய்க்கிழமை பள்ளி நேரம் முடிந்ததும் வகுப்பிலேயே இருந்துள்ளார். 

இன்று காலை பள்ளி திறக்கப்பட்டபோது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். சிறுமி தற்போது நலமாக இருக்கிறார்." என்று கூறினார்.

அவர் மேலும், "பள்ளி நேரம் முடிந்தும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அறைகளை ஆய்வு செய்யவில்லை. இது கவனக்குறைவான செயல். இதற்காக ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றும் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்