சென்னை கோடம்பாக்கம், வெள்ளாள தெருவை சேர்ந்தவர் சக்தி (43). இவர் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தேவி (36). இவர்களின் மகள் சிந்து என்ற பெண் கடந்த 2020 ஆம் ஆண்டு தந்து தோழியை வீட்டின் மூன்றாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருடைய இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன. தாடையின் ஒரு பகுதி முழுவதும் சேதமைடைந்தது.
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, உயிர்பிழைத்தார். தற்போது ஆசிரியர்கள் மற்றும் தோழிகள் உதவியுடன் படித்து ப்ளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இதுகுறித்த தகவல் செய்திகளில் வெளியானதையடுத்து தமிழக அரசே மாணவியின் மருத்துவ செலவை ஏற்கும் என முதல்வர் அறிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சிந்து மாற்றப்பட்டார்.
இந்நிலையில் இன்று (25 மே புதன் கிழமை ) மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் மாணவிக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசி அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். பின்னர் மாணவி சிந்துவுக்கு குணமாகும்வரை அவரது தந்தை ஓராண்டுகாலம் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் டீ கடை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…